திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.124 திருக்குருகாவூர் வெள்ளடை பண் - அந்தாளிக்குறிஞ்சி |
சுண்ணவெண் ணீறணி மார்பில் தோல்புனைந்
தெண்ணரும் பல்கணம் ஏத்தநின் றாடுவார்
விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே.
|
1 |
திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து
வரைமக ளோடுடன் ஆடுதிர் மல்கு
விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரை மல்கு வாளர வாட்டுகந் தீரே.
|
2 |
அடையலர் தொன்னகர் மூன்றெரித் தன்ன
நடைமட மங்கையொர் பாகம் நயந்து
விடையுகந் தேறுதிர் வெள்ளடை மேவிய
சடையமர் வெண்பிறைச் சங்கர னீரே.
|
3 |
வளங்கிளர் கங்கை மடவர லோடு
களம்பட ஆடுதிர் காடரங் காக
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர்சடை யெம்பெரு மானே.
|
4 |
சுரிகுழல் நல்ல துடியிடை யோடு
பொரிபுல்கு காட்டிடை யாடுதிர் பொங்க
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரிமழு வாட்படை எந்தை பிரானே.
|
5 |
காவியங் கண்மட வாளொடுங் காட்டிடைத்
தீயக லேந்திநின் றாடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்துகொண் டாட்டுகந் தீரே.
|
6 |
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் மறைந்து போயிற்று.
|
7 |
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் மறைந்து போயிற்று.
|
8 |
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் மறைந்து போயிற்று.
|
9 |
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் மறைந்து போயிற்று.
|
10 |
இப்பதிகத்தில் பதினொன்றாம் செய்யுள் மறைந்து போயிற்று.
|
11 |
திருச்சிற்றம்பலம் |